#வான்புகழ்_கொண்ட_வள்ளுவரை
#வாய்_பிளக்க_வைத்த_வந்தையாறு..
"ண்ணே.. விஜி ண்ணே..
எப்படீண்ணே இருக்கீங்க?"
"யாரு பா.. அது? ஓ.. வந்தையாறா.. வா ராசா..வா வா.. என்னது திடீர்னு இந்த பக்கம் காத்தடிச்சிறுக்கு..
எப்படி இருக்க?"
"ஆங்..நல்லாருக்கணே.. சும்மா உங்கள பாத்துட்டு, ஒரு விசயம் பேசலாம்னு வந்தேன்..
ஆமாஆஆ.. என்ன வீட்ல யாரையும் காணோம்?"
"உங்க அண்ணியும், பிள்ளைங்களும் பள்ளிக்கூடம் போயிட்டாங்க.. நான்.. இந்தா கடைக்கு கிளம்பிட்டேன்..
என்ன விசயம்? வாட் கேப்பனிங் டெல்லு..டெல்லு.."
"ம்ம்ம்.. இங்கிலீஸ்ல பேசி என்ன விசயம்னு ஞாபகபடுத்திட்டீங்க..
இந்த வெள்ளைக்காரனுவங்க இருந்தானுங்கள.. நம்ம நாட்ட ஆட்சி செஞ்சிகிட்டு.."
"ஆமா.. இருந்தானுங்க.. இப்ப என்ன அவிங்களுக்கு?"
"இந்த வெள்ளைக்காரனுங்க நம்ம நாட்டுல இருந்து கொள்ளையடிச்சுட்டுப் போனதுல நம்ம தமிழ்ல இருந்து நிறைய வார்த்தைகளையும் சேர்த்து கொள்ளையடிச்சுட்டு போயிட்டானுவ ண்ணே"
"என்னாது பொருள கொள்ளையடிக்கிற மாதிரி நம்ம மொழியையும் கொள்ளையடிச்சிட்டாங்களா? எப்படி சொல்ற?"
"ஆமாங்க ணே..
நம்ம திருவள்ளுவர் ஒரு குறள்ள சொல்லியிருக்காரூஊஊஊ"
"என்ன சொல்லிருக்காரூஊ?"
"#தீஞ்சொல்_வார்த்தை_செப்பிடும்_பெண்ணை
#ஏஞ்சலென_அழைக்கு_முலகு..
இதுல '#ஏஞ்சல்'ங்கிற வார்த்தையை கவனிச்சீங்களா? தேவதைகளுக்கு நாம சொல்ற இன்னொரு வார்த்த..
ஏஞ்சலீனா ஜூலி, குயின் ஏஜ்சலீன் னு..
இப்ப புரியுதா.. இந்த வார்த்தை எங்கயிருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்குன்னு?"
"அட.. ஆமாபோலயே..
சரி.. திருக்குறள் ல இந்த குறள் எத்தினியாவுது குறளா வருது தம்பீ?"
"ஆயிரத்து முன்னூத்தி முப்பத்தி ஒன்னாவது குறளா வருதுங்க ணே"
"ஓகோ..(தலைய ஆட்டியபடி).. (திடீர்னு அதிர்ச்சியாக)எதே..
ஆ..யி..ர..த்..தி முன்னூத்தி முப்பத்தி ஒ..ன்..னா..வதா..
ஏலேய்.. மொத்தமே 1330 தானடே குறளே...இதுல எங்கிட்டு இருந்து முளைச்சது 31 ஆவது குறளு?"
"ணேய்.. திருவள்ளுவரு எக்கச்சக்கமா எழுத ஆசப்பட்டார்ணே.. ஆனா அவரோட வேலை பிசில நிறைய எழுத முடியலையாம்"
"எழுத முடியலையாமா? இத யார்லேய் வந்து சொன்னது உன்கிட்ட?"
"அவரே தான்"
"(அதிர்ச்சியாக) என்னது ..
நேர்ல அவரே வந்து சொன்னதா?
என்னடே.. ஒலர்ற.."
"நேர்லனா நேர்ல இல்லைங்கணே
எங்கனவுல வந்து நேர்ல சொன்னாருங்க ணே"
"(அச்சச்சோ.. என்னாச்சுன்னு தெர்லயே இவனுக்கு.. முன்ன முத்த கவிதையா எழுதி சாவடிச்சான்.. இப்ப இல்லாத திருக்குறள இருக்குன்னு வந்து சொல்றான்.. காலங்காத்தால இவங்கிட்ட மாட்டிகிட்டோமே"-மைண்ட் வாய்ச்)
" ணே.. விஜிணே.. என்னாச்சு முழிச்சிகிட்டே தூங்குறீகளா?"
"அ..அது.. வந்து.. ஒன்னுமில்ல வந்தை.. வேலைக்கு நேரமாச்சா.. அதான் யோசன செய்யிறேன்"
"அதான்..ணே.. நா இப்ப என்ன சொல்ல வரேன்னா...."
"தம்பீ.. அண்ணனுக்கு வேலைக்கு நேரமாச்சு.. நான் போயிட்டு வந்துடுறேன்.. வந்து நிறைய கதை கதையா ச்சேய்.. குறள் குறளா பேசுவோம் பா.. வர்ட்டா?"
"ண்ணேய்.. இந்த ஒரு விசயத்த மட்டும்"
"என்ன?"
"அடுத்த குறள்ல என்ன சொல்றார்னாஆஆஆ.."
"எது? அந்த 1332 ஆவது குறள்ளயா?
" ஐ..எப்டீண்ணே.. அவ்ளோ கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க? சரி.. அதுல என்ன சொல்றாருன்னா?"
"உன்ன தள்ளி விட்டுட்டு ஓடச்சொன்னாரு..
ஆத்தாடீஈஈஈஈ. ஆள விட்றா சாமீஈஈ🏃" ஒரே ஓட்டம்..
"ண்ணே..ண்ணேஏஏஏ.. நில்லுங்க ணேஏஏ" 🏃♂️.
..🏃🏃♂️..
அது யாருபா.. அங்கிட்டு ரெண்டு பேரு வேகமா ஓடுறது..
அட.. நம்ம Appu Senthil அண்ணனும், பால முருகன் தம்பியும்..
"அட.. என்னங்க பா.. ரெண்டு பேரும் இவ்வளவு வேகமா எங்க ஓடுறீங்க?"
"அந்த கொடுமைய ஏங்கேக்குற தம்பி விஜி?.. காலங்காத்தால நானும், தம்பி பாலாவும் பேசிகிட்டு இருந்தோமா அந்த நேரம் பாத்து வந்தையாறு வந்தானா.."
"புரிஞ்சிடுச்சு..
வெள்ளக்காரன், கொள்ளக்காரன் னு ஆரம்பிச்சிருப்பானே"
"அட..ஆமாஆஆஆ'' இது பாலா
"தமிழ்மொழி.. குறளுன்னு சொல்லிருப்பானே"
"ஆமாந்தம்பி ஆமா.." இது அப்பு அண்ணன்..
"குறள் போலவே ஒன்னு சொல்லிருப்பானே"
"அட.. ஆமாம்பா ஆமா.. இது எப்படி உனக்கு?"
"சொன்னானே.. ஏங்கிட்டையும் சொன்னானே.. இப்பக்கூட அவந்தான் வெரட்டிகிட்டு வரான்அதான் .. நானும் ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்"
"அச்சச்சோ" இருவரும் கோரசாக..
🏃♂️🏃🏃♂️ இப்ப மூனுபேரும் சேர்ந்து ஓடுறாங்க...
🏊♂️
"ஆகா.. யாரோ ஆத்தங்கரை ஓரமா மயங்கி கிடக்குறாங்க தம்பிகளா. வாங்க போயி பாப்போம்"அப்பு அண்ணன் 🏃♂️ 🏃🏃 ..
"அடடே.. நம்ம Babu Sabapathi அண்ணன்.."
"அண்ணே..அண்ணே.. பாபண்ணே.. எழுந்திருங்க" மூவரும் கோரசாக..
மயக்கம் தெளிஞ்சு எழுந்த நம்ம பாபு அண்ணன்.. கொஞ்சம் சுத்தியும் முத்தியும் பாத்துட்டு.. நம்மல அடையாளம் கண்டுபிடிச்சு லேசா சிரிச்சாங்க..
"என்னங்க ணே ..
என்ன ஆச்சு?"
"தம்பிகளா.. அந்த வந்தையாறு போயிட்டானா?"
"புரிஞ்சிடுச்சு.. அண்ணன் நம்மல விட ரொம்ப பலமா பாதிக்கப்பட்டிருக்காங்க.." பாலா..
"அண்ணே.. நீங்க மயக்கம் போட்டு விழுகுற அளவுக்கு அப்படி என்ன சொன்னான்?" விஜி
"குறளுப்போல ஏதோ சொன்னாம்பா" பாபு அண்ணன்
"அண்ணே.. 1330 குறளோட கூடுதலா 2 குறளுன்னு ஏதோ உளறுனதுக்கா மயக்கம்" அப்பு அண்ணன் கேட்க..
"எதே.. வெறும் ரெண்டு உளறலா? போங்க அப்பு போங்க.. திருவள்ளுவரு நிறைய எழுத ஆசப்பட்டாராம்.. அவரால முடியலையாம்.. இவர் அத தொடர்ந்து எழுதப் போறாராமாம்.." பாபு அண்ணன்
"என்ன.. மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு பத்து-இருவது எழுதுவானா?" பாலா கேட்க..
"தம்பி.. பாலா.. அப்படி அவஞ்சொல்லியிருந்தா நான் ஏன் இங்க மயங்கி விழப்போறேன்..?
நான் விழுந்தது இங்க இல்ல.. நடு ஆத்துல போய் குதிச்சுபுட்டேன்... தண்ணி கம்மியா இருந்ததுனால அலையே என்னை தள்ளிட்டு வந்திருச்சு போல."
"அப்படி எத்தன எழுதப்போறதா சொன்னாம்ங்க ணே?" விஜய் கேட்க..
"அவன் சொன்னது.. அவன் சொன்னது" அண்ணனின் முகம் மாறியது.
"சொல்லுங்க ணே..சொல்லுங்க.. அவன் சொன்னது?"
"பதிமூனாயிரத்தி முன்னூத்தி முப்பதாம்.. (13,330)"
"என்னாஆஆதுஉஉஉஉ அவ்ளோவாஆஆஆ" மூனு பேருமே வாயை பிளந்தார்கள்..
"இதை கேட்டா வள்ளுவரே வாய பிளந்துருவாரே ..ணே"
"1330 குறள்கள்ல முழுசா 30 கூட நமக்கு நினைவுல இருக்காது.. இந்த லட்சனத்துல இவன் எழுதுனா என்னாகுறதுன்னு நினைச்சுப் பாத்தேன்.. தண்ணில ஓடி போயி குதிச்சுபுட்டேன் தம்பீகளா"
😕😕
"அடடே.. இப்புடி ஆக்கிப்புட்டானே பக்கீ" னு அப்பு அண்ணன் சொல்லிகிட்டு இருக்கும் போது..
"ஆகாஆஆ.. அண்ணன்மாருங்க நாலு பேரும் இங்க தான் இருக்கீங்களாஆஆ" கேட்டபடி வந்தையாறு வர..
பாபு அண்ணன் பின்னாடி மத்த மூனு பேரும் போயி நின்னுபுட்டாங்க..
"அண்ணே..அ..அ..ண்ணே.. வந்துட்டான்ணே.."
"பொறு பொறு.. தம்பீ விஜய்.. நமக்கும் பதட்டமா தான் இருக்கு சமாளிப்போம்" பாபு அண்ணன் கைகள புடிச்சு சொல்லிபுட்டு..
"எ.எ.என்ன ராசா.. வந்தை ராசா.. செல்லுபா.. இப்ப ..இப்ப என்ன சொல்ல போற?"
"அண்ணே.. அண்ணே.. வெள்ளக்காரன் கொள்ளையடிச்சதுல இன்னொரு தமிழ்வார்த்த இருக்கு. தெரியுமா?"
"என்னது ராசா? எதுல இருக்கு?"
"அதே திருக்குறள்ல தான்..
#ஜாங்கிரி_வார்த்தை_பேசா_மாக்கள்
#ஆங்கிரி_பேர்டென_அழைக்கப்_படும்"
"அச்சச்சோ.. ஆள விட்றா சாமீ..
நீயும், உன் குறளும்.. வள்ளுவரே எழுத்தாணிய எடுத்து உன் தொண்டையில குத்துனாத்தான் அடங்குவ" னு சொல்லிபுட்டு நாலு பேரும் 🏃🏃🏃♂️🏃♂️ ஓடுனாங்க..
🏃♂️🏃♂️🏃♂️🏃♂️ 🏃
பின்னாடியே வந்தையாறும் ஓடினான்.
விஜயகுமார் வேல்முருகன்
