கவிதாய்களை போற்றிடுவோம்..!
கேடுநிறை மாந்தர்களின்-குணக்
கேடுநிறை எண்ணங்களினால்
பாடுஅது பெரும்பாடு கவியெழுதும்
கவிமகள்கள் படும்பாடு
கவிதை எதுவென்றறியாமல்
கவிதை இதுதானென்று வீன்வாதம் புரிந்து
கவிதையினை கொல்வோர் நடுவில்
கவிதையை கவிதையாய் படைக்கும்
கவிதாய்களை காயப்படுத்தாதீர் கயவரே
மகளிரவர் மாண்புதனை பண்புடனே
போற்றிட்ட கவிகள் உதித்த நாடது நம்நாடாம்
அம்மி அரைத்த மங்கையவள் மகத்துவத்தை
கும்மி பாட்டிலுரைத்த கவிநம் மகாகவியாம்
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக