அன்பை வளர்ப்போம்
~~~~~~~~~~~~~~~
நெஞ்சமெலாம் ஈரமதைக்கொண்டு
பஞ்சமிலா நட்பதைகொள்வோம்
வஞ்சமிலா வாழ்வதை வாழ்ந்து
கஞ்சமிலா அன்பதை வளர்ப்போம்
பணம்சேர்க்கும் ஆர்வமதை குறைத்து-நல்
மனம்சேர்க்கும் ஆர்வமதை வளர்ப்போம்
குணம்தனை மதியினில் வைத்தே-தலை
கனம்தனை வீதியில் எறிவோம்
அருள்தரும் வார்த்தைகள் கொண்டே
இருள்தரும் பகையினை வெல்வோம்
விஜயகுமார் வேல்முருகன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக