சனி, 22 ஆகஸ்ட், 2015

தமிழை வளர்த்திடுவோம்

தமிழை வளர்த்திடுவோம்
~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் தமிழில் பேச தயக்கம் ஏனடா 
தாய்மொழி உனக்கு தமிழே தானடா 
தமிழில் உனக்கு இல்லாத அர்த்தங்கள் ஏதடா 
தமிழை தவிர்த்து அன்னியமொழியின் ஆதிக்கம் அதிகம் ஏனடா 
தமிழகத்திலேயே தமிழிலில்லையென்றால் 
தமிழ் வளர்வது ஏதடா 
தமிழ்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரடா 
தமிழறிஞர் பலர் புகழ் வளர்த்த நாடடா 
தமிழக பள்ளிகளில் தமிழின் பாடது பெரும்பாடடா 
தமிழ்பெயரெதுவும் பிள்ளைகளுக்கு இல்லையே அது ஏனடா
தமிழைபடி என்றநிலை போனதடா
தமிழையும்படி என்றே நிலையும் ஆனதடா
தற்கால நிலையது மாறவேண்டுமடா
தன்னிகரில்லா தமிழதை ஏற்றம்பெற வைப்போமடா..!

        விஜயகுமார் வேல்முருகன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக