உடலது தளர்வுற்றாலும்
உள்ளமது தளர்வடைவதில்லை
எந்தாய்மொழியாம்
தமிழ்மொழியை நினைத்திடையிலே..
உற்சாகம் கரைபுரண்டோடுதே
உன்னத தமிழினை படிக்கையிலே
பரவசம் பரவசம் எம்தமிழ்கவிகளின் கவிதை தேனை ருசிக்கையிலே
ஆனந்தம் ஆனந்தம் அருந்தமிழ் இலக்கியங்களை படிக்கையிலே
ஆகா என்னச் சொல்வேன் இனிமைத்தமிழின்
இலக்கியங்களை
பேரானந்தம் பேரானந்தம்
எம் புரட்ச்சிக்கவியின் கவிதையினிலே
மறுபடியும் ஒரு பிறப்பென்றால் மங்காத்தமிழனாய் பிறந்திடல் வேண்டுமே அய்யா
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக