அனைத்துயிரும்
ஆருயிரே அன்புடனே
இதயம்தனில்
ஈரம்கொண்டால்..
உள்ளத்திலே ஒளியதுகொண்டால்
ஊர்க்குருவியும் உனக்காகும் நட்பாய்
எவ்வுயிரையும் காக்கவே
ஏனிரக்கமில்லை மானிடனே
ஐம்புலனிலும் இரக்கம்கொண்டால்
ஒருவனில்லை நீ
ஓராயிரம் உயிர்களாவாய்நீ
ஔடத தாயன்பு கொண்டு
எஃகு மனதிலும் மனிதனாய் உயர்வாய்..
விஜயகுமார் வேல்முருகன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக