பரிசம் போட வாரேன்
~~~~~~~~~~~~~~~
ஒத்தகடைக்குபோற
நேர்மண்ணுபாத போல-ஏ(என்)
அத்தமக மேல என்னோட
கண்ணு பார்வ தானே
கோயிலுக்கு நேந்துகிட்டு
கட்டிவச்ச காசபோல
அவ நெனப்பதானே
நெஞ்சுக்குள்ள
கட்டிவச்சேன் பாசத்தால
வெறும் ஆசையெல்லாம்
அவமேல இல்ல
உயிர் நேசமெல்லாம் அவமேல
நான் என்னத்த சொல்ல
வேசமெல்லாம் போட்டதில்ல
பாசாங்கும் செஞ்சதில்ல
நெசமெல்லாம் பேசுறேனே
பாசமாக பாக்குறேனே
நேசமுள்ள அவகிட்டதானே
ஆத்தங்கர மேட்டுலையும்
மஞ்சகிழங்கு காட்டுலயும்
ஒதுங்கி நாம பேசவேணாம்
உரிமையுள்ள மச்சாங்கிட்ட
வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே
வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
பரிசம் போடும் நாளுமாச்சு
கரிசக்காட்டு குயிலுங்கூட
பரிகாசம் காட்டி கூவியாச்சு
மாரிமாசம் கழிஞ்சபின்னே
மணமுடிக்க போறேன் உன்ன
விஜயகுமார் வேல்முருகன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக