மாறா மனமே
~~~~~~~~~
ஏழ்மையில் அருள் மனம்
வளமையில் இருள் மனம்
அருளதை கொல்லுதே இருள்
பதவியில்லை அடங்கியிருப்பர்
பதவியினில் ஆடத ஆட்டமெலாம்
பகட்டுடனே ஆடிடுவர்
வரவது சிறிதெனினும் பெருகிய மனம்
வரவது பெருகியதும் குறுகியதேனோ மனம்
ஊருக்கு உரைத்திடலில் பெருமை
தனக்கென கொள்வதில் சிறுமை
அன்பினில் அறம் வளர்த்த
வாழ்க்கை-கௌரவ
வம்பினில் தரம்தாழும் வாழ்க்கை
எந்நிலை கொண்டாலும்
தன்னிலை மாறாத
மனமே மாமருந்து..
விஜயகுமார் வேல்முருகன்...
அருமை அண்ணா!
பதிலளிநீக்கு