செவ்வாய், 27 அக்டோபர், 2015

தாய் (வஞ்சி விருத்தம்)

மண்ணினில் பிறந்த மாந்தரில் தாயின்
..மாண்பினை மறந்தவர் இல்லை
பண்ணினை எழுதும் புலவரும் தாயின்
..பண்பினைப் பாடிட மறவர்!
எண்ணமும் சிறந்து விளங்கிடத் தாயை
..என்றுமே நினைத்திட வேண்டும்!
திண்ணமாய் அன்பைத் தாயிடம் வைத்தே
..திறமைகள் வளர்த்திடல் நலமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக