கிட்டு மாமாவும் வரது குட்டியும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கி்ட்டு மாமா:
தனனானணே.. தன்ன தனனானணே...
வரதுகுட்டி :
அடடே.. வாங்க 'பிட்டு'மாமா..
கிட்டு:
(அதிர்ச்சியாக) என்னடா வரதுகுட்டி..
வரது:
ஓ.. சாரி மாமா.. டங்கு சிலிப்பாயிடித்து.. வாங்க கிட்டு மாமா..
என்ன... காலையிலேயே பாட்டு பாடிண்டு குசியா இருக்கேள்.. மாமி இன்னைக்கி உங்கள துணி தோய்க்க வேண்டாம்னு சொல்லிட்டாளா..
கிட்டு:
ஓ.. அதுவாஆஆ.. ஒங்க மாமி பேஷா ஒரு காப்பி போட்டு தந்தா அது நாக்குலயே ஒட்டிண்டதுடா அம்பி..
வரது:
என்ன.. மாமி காபியில பாலுக்கு பதிலா பெவிகால் கலந்துண்ட்டாளா?
கிட்டு:
அதில்லடா.. அதோட ருசி நாக்குலயே ஒட்டிண்டு சொன்னேன்..
(என்றபடியே நெத்திய தடவினார் மாமா)
வரது:
அச்சச்சோ.. என்ன மாமா நெத்தியில கிரிக்கெட் பந்த போல ஒரு வீக்கம்?
கிட்டு:
அது ஒன்னுமில்லடா வரதுகுட்டி..
நேத்து சேப்பாக்கத்துல ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடந்துச்சுல்லயோ,
அதுக்கு போயிருந்தேனா.. அப்ப ஆகாசத்துல கருடபகவான் வந்துட்டார்.
அவர அன்னாந்து பார்த்து சேவிச்சிட்டிருந்தேனோ (கும்புட்டுகிட்டு)
அப்ப.. நம்ம டோனி படவா எலிக்காப்டர் ஸ்டைல்ல ஒரு சிக்சர் உட்டான்.. அத நா கவனிக்கல.. நேரா வந்து நெத்தியிலேயே ஒரு பன்ச் பந்தாட்டம் வீங்கிடுச்சுடா..
வரது:
ஏங்கானும் மாமா ரீல் சுத்துரீர் .. இந்த தடவ ஐபிஎல் ல சென்னை டீமே கிடையாதேன்னோ..
அதுவுமில்லாம சென்னையில கிரிக்கெட் மேட்சே நடக்கலையோன்னோ..
எனக்கென்னமோ,
நேத்து நீங்க வச்ச வெங்காய சாம்பார்ல உப்பு அதிகமாயிடுத்துனு மாமி பித்தளை சொம்ப எடுத்து அடிச்சதுல வந்த வீக்கம் போல தெரியுது ..
உண்மைய சொல்லுங்க மாமா...
கிட்டு:
(போன் வந்த மாதிரி பவலா காட்டி) ஹலோ! சங்கரய்யரா.. ஓ.. இதோ ஒங்காத்துக்கு தான்.. வந்துண்டு இருக்கேன்..(என நழுவினார் மாமா)
வரது:
உண்மைய சொன்னவுடனே..
வராத போன வந்தமாதிரி பாவ்லா காட்டிட்டு எஸ்கேப் ஆகுறீரா..
போங்க.. போங்க.. ஆத்துல காயப்போட்டுருந்த வடாம்ல நாலஞ்ச காணோம்னு மாமி கையில பூரிக்கட்டையோட காத்திண்டு இருக்கா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக