#வேட்டைக்காடு 2
மணிமாறன் ஆவேசம் அடங்கி தன் முகத்தில் வழிந்த இரத்தத்துளிகளை தன் கைகளால் துடைத்து விட்டு சற்றே இருளான பகுதியை நோக்கி நகர..
பசி வயிற்றைக் கிள்ளியது...
ஊருக்கு ஒதுக்குப்பரமான பகுதி.. வீடுகளும் இல்லை.. ஆள் நடமாட்டமும் இல்லை..
தொடர்ந்து நடக்க எதிர்பட்டது ஒரு சுடுகாடு.. ஏதோ ஒரு உடல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி சிறிய அளவில் புகை மட்டும் வந்து கொண்டிருந்தது..
உள்ளே நுழைந்த மணிமாறன் அங்கு தெரிந்த வெட்டியான் குடிசை நோக்கி சென்றார்.. குடிசையருகே பனையோலை பாயில் வெட்டியான் முழு போதையில் தூங்கி கொண்டிருந்தது, வீசிய சாராய நாற்றத்தில் தெரிய.. வெட்டியானை எழுப்பி பயனில்லை என்று குடிசைக்குள் நுழைந்து எதையோ தேட.. மண்பாத்திரங்கள் மட்டும் காலியாக இருந்தன..
ஒரு சிறிய மண் குடுவையில் சிறிதளவு நீர் மட்டும் இருக்க அதை குடித்துவிட்டு வெளியே வந்தார்..
சற்றுத் தள்ளி ஒரு புதர் அருகே ஏதோ ஒரு சலசலப்பு சத்தம் கேட்டதும்.. சற்று கவனமாகவும், மெதுவாகவும் அந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்து போனார்...
அங்கே..
ஒரு கீரியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது..
அதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்..
திடீரென அவரது முகத்திலும், கண்களிலும் ஒரு கொடுற புன்னகை.்
"ஹஹ்ஹா...ஹா ஹா ஹா ஹா" என சத்தமாக சிரிக்க.. சண்டையிட்டுக் கொண்டிருந்த கீரி நிலைத் தடுமாறி கீழே விழுந்து அலறிய படி ஓடியது.. பாம்பும் மறுபக்கம் ஓட முயல.. திடீரென மணிமாறன் பாய்ந்து பாம்பின் வாலைப் பிடித்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அருகிலிருந்த கல்லறையின் மீது வேகமாக அடிக்க.. "சொத்" என ஒரு சத்தம் .. செத்தது பாம்பு..
மணிமாறனின் முகம் சற்று அகோரமாக மாற.. பாம்பின் தலையை கடித்து துண்டாக்கி போட்டுவிட்டு.. மீதியை மென்று தின்ன ஆரம்பித்தார்..
அப்பொழுது..
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக