தாடையில் தந்த முத்தம்
கதகதப்பாய் தான் இருந்தது
அந்த அடர் இருளுக்கு..
தாடியின் அடர் மயிர்களுக்குள்
ஒளிந்து கொண்டிருக்குமோ
இருளில் தந்த முத்தம்..
ரகசியங்கள் பலவற்றை தின்றும்
ஜீரணிக்காமல், கிசுகிசுப்பான காதலை
ஒட்டுக்கேட்கிறது பிசுபிசுப்பான இருள்..
புணர்தலிலும் அதிக இன்பத்தை
அள்ளித் தெளித்து விடுகிறது
தழுவிடும் உடல்களுக்கு இருள்..
பனியில் நனைந்த இரவு
கூட்டிலிருந்து விழும் இறகினை
துணையாக அணைக்கும் இருள்..
ஒளிர்தலாய் இருப்பதை விட
இருள்தலில் சிறப்பு: சோக
கண்ணீரை கரைக்கும் இருள்..
ஆழ் மனதின் தியானத்தில்
ஒளியினை தோற்றுவித்து
புன்னகை புரியும் இருள்..
அண்டத்தை ஒளிர்விக்கும் ஆதவனையும்
தன்னுளடக்கி ரகசியம் காக்கிறது
இருள் எனும் சாம்ராஜ்யம்.!
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக