செவ்வாய், 30 மே, 2017

வந்தையும் மாய உலகமும்..

#வந்தையும்_மாய_உலகமும்

இந்த வீதி எங்குதான் சென்று முடிகிறது என்று , இன்று பார்த்தே விடுவோம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து நடக்கலானான் வந்தை ..
ஏதேதோ சிந்தனைகள், என்னென்னவோ நினைவுகள் கடக்கும் ஒவ்வொரு அடியிலும்..
ஏதோ ஓர் எதிர்பார்ப்பு எதிரில் என்ன இருக்கும் என்று அறியும் ஆவலில்..

ஏதேதோ சப்தங்கள், ஓசைகள், இசைகள் என மாறி மாறி கேட்க,
காதின் மடல்கள் தான் சற்று விரிபட கேட்டபடியே நகர்ந்தான்..

திடீரென கண்களின் விழிகள் அகல.. விரைத்து அசையாமல் நின்றுவிட்டான்...
எதிரில்...

எதிரில்...

சிறு சிறு ஒளித்துளிகள் இணைந்து ஒரு பெரிய பந்தினைப் போல உருவாகி,
வெளிர் நீலத்தில் ஒளிர ஆரம்பித்தது..
அந்த இடமே அவ்வெளிச்ச சாயத்தால் ஒளிர ஆரம்பித்து..
வந்தையின் முகத்திலும் வெளிச்சம் பரவ.. இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான்...
மெல்ல நகர்ந்து அப்பந்தின் அருகில் செல்ல ஆரம்பிக்க,
"வந்தை நில்.. நானும் வரேன்" என்றொரு குரல் கேட்க..
திரும்பினான்..
அங்கே..
பால முருகன் மூச்சு வாங்க ஓடி வந்துக்கொண்டிருந்தான்..

மூச்சு வாங்க ஓடிவந்த பாலா..
"வந்தை.. இந்தப்பக்கம் போவக்கூடாதுனு எங்க தாத்தா தமிழ் குமரன் நிறைய தடவ சொல்லிருக்காரு.. ஏன்னு கேட்டால் சொல்ல மாட்டாரு..
நானும் போகனும்னு நினைப்பேன் ஆனால் முடியாது..
இப்ப நீ இந்தப்பக்கம் போனத பார்த்தேனா .. அதான் நானும் உன் பின்னாடியே வந்தேன்" என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..
"ஓ.. அப்படியா.. எனக்கும் தான் ரொம்ப நாளாக ஆசை.. என்னோட சின்ன தாத்தா லட்சுமணன் னும் அப்படிதான் சொல்வாரு ணே.. இன்னைக்கி பார்த்தே ஆகனும்னு நினைச்சிகிட்டு,  நம்ம உருப்புட்டானந்தா கிட்ட கேட்டேனா... 'எதுவாக இருந்தாலும் அடுத்தவங்க்கிட்ட கேட்டும் உனக்கு புரியல இல்லனா தெரியலைனா நீனே இறங்கி பார்த்து தெரிஞ்சிக்க தம்பி' னு சொல்லிட்டாரு .. அதனாலதான் இன்னைக்கி துணிஞ்சி நடந்தாச்சு" என்று சொல்லியபடி இருவரும் அந்த ஒளிரும் பந்தை நோக்கி போக,
அந்த பந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி அதாவது அவர்களிடம் சிக்காமல் நகர்ந்தது...

இருந்தாலும் அதை விடாமல் இருவரும் வேகமாக பின்தொடர அதுவும் வேகமாக நகர ஆரம்பித்தது.. பின்பு இருவரும் ஓட.. அதுவும் வேகமாக ஓட..
எப்படியோ ஓடி அதை இருவரும் பிடித்தவுடன்..
அது..
வெடித்து சிதறியது..
அப்போது..

அப்பொழுது,
வந்தையும், பாலாவும் காற்றில் பறந்தபடி மிதந்துக்கொண்டிருந்தனர்..
அவர்கள் இருவர் கண்களுக்கும் அங்கே இரு உடல்கள் இருப்பது தெரிந்தது.. அது யாராக இருக்கும் என இருவரும் கேட்டுக்கொண்டே அருகில் சென்றதும்...
இருவருக்கும் அதிர்ச்சி..

அது அவர்களின் இருவருடைய உடல்களே தான்..

"அய்யய்யோ.. நாம இப்போ செத்து ஆவியா மாறிட்டோமா..
அய்யய்யோ எங்க தாத்தா சொன்னத கேட்காம போயிட்டேனே..இப்ப நம்மல காணாம  நம்ப வீட்ல தேடுவாங்களே.. இந்தப்பக்கம் கூட யாரும் வரமாட்டாங்களே" னு பாலா அழ ஆரம்பிக்க....

"அய்யய்யோ.. ஆமா பாலாணே.. நானும் கேக்கலையே.. எல்லாம் அந்த உருப்புட்டானந்தாவால வந்த வினை.. யோவ்..உருப்புட்டானந்தா உனக்கு நா என்ன பாவம்யா செஞ்சே(ன்).. இப்படி ஆயிட்டோமே யா..
மவனே நீ மட்டும் கையில கிடைச்சேஏஏ.." என வந்தை பல்லை கடிச்சி சொல்லிகிட்டு இருக்கும்போதே.. திடீரென ஒரு புகைமண்டலம்.. பார்த்தால்..
அங்கே உருப்புட்டானந்தா..

"தம்பீகளா.. நீங்கள் உங்கள் தேடலில் துணிந்து இறங்கிவிட்டீர்கள்.. அதற்காக இதையெல்லாம் பார்த்தால் முடியாது" என..

"போயா..போ.. இப்ப வந்து வியாக்கியானம் பேசுற.. இப்ப நாங்க தான் செத்துபோயிட்டோமே.. எங்க வீட்ல எல்லாரும் பாவம்,
நாங்க இல்லாம  எங்களைத் தேடி எப்படிலாம் அலைவாங்க.." னு வந்தை கத்த..

"தம்பி .. நீங்க ரெண்டு பேரும் செத்துப்போயிட்டீங்கனு யாரு சொன்னா.. நல்லா கிட்டப்போயி பாருங்க"

இருவரும் கிட்டபோய் பார்த்தார்கள்..
மூச்சு விடுவதால் நெஞ்சு மேலும் கீழும் அசைவது தெரிந்தது..
இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில்..
அதில் பாலாவின் குறட்டை வேறு..

"பார்த்தீர்களா.. தம்பி.."

"ஆமாம்..உருப்புட்டானந்தா..
ஆனால்.. அந்து பந்து வெடிச்சதே" வந்தை கேட்க..

"அப்படியிருந்தால் உங்கள் உடல்கள் சிதறியிருக்கனுமே..
ஏன் அப்படி ஆகலை தெரியுமா தம்பிகளா?"

"அதான் தெரியலைங்களே சாமீ" பாலா...

"ஏன்னா.. இப்ப நீங்க இருக்குறது
'மாய உலகம்' எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டீர்கள்.. இனி வெளியேறுவது உங்கள் திறமை தம்பீகளா.. சிக்கலான நேரங்களில் மட்டும் நான் வருவேன்..சரியா.. நான் கிளம்பட்டுமா?" என கேட்க..

"ஒரு நிமிசம் உருப்புட்டானந்தா..
எங்க வீட்ல எங்களைத் தேடுவாங்களே.." என வந்தை கேட்க..

"ஒன்னுந் தேடமாட்டாங்க..
உங்க இம்சை ரெண்டு நாளைக்கு இருக்காதுனு உங்க தாத்தாக்கள் தமிழ் குமரனும் யும்.
லட்சுமணனும் னும் நிம்மதியா இருப்பாங்க... சரி.. நான் வரட்டா" என்று உருப்புட்டானந்தா இருவருக்கும் டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினார்..

இருவரும் கையை ஆட்டிவிட்டு, அந்த பாதையில் மிதக்க ஆரம்பித்தார்கள்..
சிறிது தூரம் போனதும் ஒரு பெரிய மரம் அது மிக அகலமாக இருந்தது.. அதில் ஒரு பெரிய பொந்து.. இருவரும் அதனுள் நுழைந்து மறுபுறம் வந்தாஆஆஆஆல்....

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

ஞாயிறு, 28 மே, 2017

அது

ஓங்கி அடித்ததில் எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை.
சுற்றிலும் தேடித்தேடிப் பார்த்தான்.. கிடைக்கவேயில்லை
நேரம் ஆக ஆக முகத்தில் பதற்றம் அதிகமாக தொடங்கியது..
நெஞ்சும் திக் திக் என்று அடித்தப்படியே இருந்தது..
"அய்யய்யோ என்னத்த செய்வேன்" என்று முணுமுணுப்பு..
பக்கத்தில் இருந்த செடிகளில் எல்லாம் கூர்ந்து கவனித்து தேடினான்..
ஊஹூம்..கிடைக்கவில்லை..

திடீரென முன்பக்கமாக யாரோ இரும்பு கதவை திறக்கும் சத்தம் கேட்டது..
"அய்யய்யோ.. ஆளு வந்திடுச்சுப் போலையே.. என்ன செய்வேன்" என்று மண்டையில் கையை வைத்து மேலே பாத்துவிட்டு கீழே பார்த்தான்..கண்கள் பளீரென விரிந்தது.. கல்லின் பக்கத்திலேயே "அது" இருந்தது
"யப்பாடி.. கிடைச்சுதுடா சாமி" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே கையில் எடுத்ததும்,
"என்னங்க.. துணியெல்லாம் தோச்சாச்சா..?" என்று ஒரு பெண்ணின் குரல்..
"ம்ம்ம்.. தோச்சாச்சுமா" என்று சொல்லியபடியே கையில் எடுத்ததை துணி நிறைந்த தண்ணீர் பக்கெட்டில் சட்டுனு போட்டுவிட்டு சொன்னான்..

"சரி... புதுசா வாங்குன நைட்டிய தனியா தானே தோச்சீங்க?"

"ஆமாமா.. தனியா தான்.. சரி.. நீ போமா.. பிளாஸ்க்ல டீ இருக்கு.. குடிச்சிட்டு ரெஸ்ட் எடு. துணிகள புழிஞ்சி காயப்போட்டு வந்துடுறேன்" என்று சொல்ல..

"ம்ம்ம்..புது நைட்டி பத்ரம்" னு சொல்லிட்டு போக..

உடனே "அதை" போட்ட துணி நிறைந்த தண்ணீர் பக்கெட்டில் கையை விட்டு தேடி எடுத்தான்..
கையில் .. ஒரு பெரிய அளவு 'பட்டன்'..

அலசி போட்ட துணிகளில் இருந்து ஒரு துணியை எடுத்து , அந்த 'பட்டனை' வைத்து அளவு பார்த்தான்..
"அப்பாடி .. இது இந்த புது நைட்டியோட பட்டனே தான்.. நல்ல வேள கிடைச்சிடுச்சு.. இல்ல நம்மல துவைச்சி எடுத்திருப்பா.. இனி துணிகள ஓங்கி அடிக்காம தோய்க்கனும்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு நகர்ந்தான் அவன்..

விஜயகுமார் வேல்முருகன்

செவ்வாய், 16 மே, 2017

வந்தை நதி

உச்சி வெயிலு மண்டைய பொளக்குற நேரம்..
நம்ம ஜின்னா பாய் ஏதோ அவசரமா பேசனும்னு வந்தை ஆறுக்கு போன் போட்டாப்ல..
"முத்து முத்தம்மா முத்தமொன்னு தரலாமா..
"முத்து முத்தம்மா முத்தமொன்னு தரலாமா.." (போன் காலர் டியூன் தான்) 'ஊக்கும்.. இதுக்கு மட்டும் ஒன்றும் கொறைச்சல் இல்லை'னு பாய் முனுமுனுத்துகிட்டே இருக்கும் போது
மூன்றாவது முறையாக
"முத்து முத்தம்மா முத்தமொன்னு தரலா.."
"அலா..ஆரு'' எதிர்முனையில்

" அலோ.. தம்பி வந்தை நாந்தாம்பா ஜின்னா பாய் பேசுறேன்.."

"ஆஆஆஆங்.. அல்லுங்க ஆய்.."

"என்னாது.. அள்ளுங்க..ஆய்..யா..
யோவ் தம்பி...நான் ஜின்னா பாய் பேசுறேன்"

"அல்லா(ம்) எரியிது.. ஈக்கிர(ம)ஆ அல்லுங்க ஆய்"

"டேய்.. என்னடா உளர்ற..
விளையாடாதடா..ஆறு'

" அல்லாம் எனக்கி..எரியிது.. அல்லுங்க.. ஆய்.."

"டேஏஏஏய்.. இருடா நேர்லையே வந்து உன்ன பாத்துக்கிறேன்"னு கோவமா போன வச்சிட்டு வேகமா  நடந்து போய்
அவரோட பைக்க எடுத்து  "அடேய்..வந்தை இதோ வரேன்டா" னு பல்ல கடிச்சிகிட்டு பைக்க ஓங்கி ஒரே உதை.. டர்ர்ர்ர்..னு அலறிகிட்டு நம்ம பாயை சுமந்துகிட்டு வண்டி ஓடுச்சு..

கொஞ்ச தூரம் போனதும் வண்டிய அப்படியே நிறுத்தி சட்டை கையில் இருந்து போனை எடுத்து நம்பர அழுத்த
"அலோ.. யாருங்க" னு ஒரு பெண் குரல்..

"அலோ.. நா..ஜின்னா பாய் பேசுறேன்மா.. "

"ஆ.. சொல்லுங்க ணே"

"விஜயகுமார் இல்லையாமா"

"அவரு, காலையில ஒரு போன்கால் வந்ததும், அவசரமா கிளம்பி போயிட்டாருங்க ணே.. ஏங்கிட்டையும் ஒன்னுஞ்சொல்லல.. போகுற அவசரத்துல போனை வச்சிட்டுப் போயிட்டாருங்க ணே"

"சரிமா.. வந்தா நான் போன் செய்ய சொன்னேனு சொல்லுங்க மா"

"சரிங்க ணே" போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது..

"அடச்சே.. இந்த மனுசன் வேற எங்கப்போனாரு.. அவரையும் கூட்டிட்டுப்போய் வந்தை பயல ஒரு வழிபண்ணாலாம்னு பார்த்தா" என்று மீண்டும் வண்டியை வேகமாக ஓட்டிப்போக ஆரம்பிச்சாரு..
வெயிலு வேற மண்ட காய செய்தது..

இடது, வலதுனு மூனு தெரு தள்ளி ஒரு வீட்டுக்கு முன்னாடி நிறுத்த..
அங்க ஏற்கனவே ஒரு பைக் வண்டி நின்டத பார்ததும்..
"அடடே.. இவரும் இங்க தான் இருக்காரா" னு அந்த வண்டியை தட்டிட்டு ..
"அடேய் வந்தைஐஐஐ" னு கோவமா கத்திகிட்டு உள்ளே போனாஆஆஆஆ...

அங்க,
வந்தை வாயில  கீழ் உதட்டுல ஒரு கட்டோடு நிற்க.. ஆள் பார்க்க
வெள்ளைக்காரனுக்கு வந்த நீக்ரோ உதடுபோல இருந்துச்சு..

"அட.. ஆங்க..ஆய்" என கூப்டுகிட்டே வந்தை வர..
"அடடே.. வாங்க பாய்" என்று கோரசாக சொல்லிகிட்டே விஜயகுமாரும், கார்த்திக்கும் நடந்து வர..

"அய்யய்யோ.. என்னடா ஆச்சு வந்தை உனக்கு'னு பாய் கேட்க..

'அது வந்து பாய்ய்ய்" னு கார்த்திக் சொல்ல வர..

"இர்டா..நான்ஏ.. சல்லுறான்.."

"வேண்டான்டா வந்தை , கார்த்திக்கே சொல்லட்டும்.. உனக்கு ஏன்டா கஷ்டம்" னு விஜயகுமார் சொல்ல..

'இல்ல ணே.. நான்ஏ..சல்றான்.."

'ஊக்கும்.. இது தான் உங்கிட்ட பிடிவாதம்.. சொல்லித்தொல"வி.குமார்

"ம்ம்ம்.. சொல்லு.. சொல்லித் தொல' பாய் காட்டமாக..

" அது.. அந்து ஆய்... ஏத்து ஆத்திரி..ஆடியில அடுக்கக்கோக"

பாய் முழிச்சிகிட்டே விஜயகுமார பார்க்க..
(இனி வந்தை பேச , பாய் வி.குமாரை பார்க்க அவர் அதை மொழிப்பெயர்த்து சொல்வதாக கற்பனை செய்துக்கொள்ளுங்க)

"தம்பி கார்த்திக் போயி பாய்க்கு ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வா..
பாய் உக்காருங்க அவன் என்ன சொல்றான்னா ..
' அது வந்து பாய்.. நேத்து ராத்திரி மாடியில படுக்கப்போக' அப்போ"

"இர்ங்க..இர்ங்க.. ஆந்தான்ணே  அல்லுஅன்.."வந்தை..

'இருங்க..இருங்க..நாந்தான்ணே சொல்லுவேன்' வி்.குமார்

"ஆடில இர்க்குங்கோது...
இடீர்னு.. தஙில் அந்துடுச்ச"

'மாடியில இருக்கும்போது..
திடீர்னு.. தமிழ் வந்திடுச்சா..'

"எண்டு ஏரும்.. ஏசிகிட்டு இருந்தோஆஆ.. நான்.. அகள  கட்டிகிடிச்சி உத்தம் அச்சேனா..அக்கறம் ஆத்தா.. அது நாயி.."

'ரெண்டு பேரும்.. பேசிகிட்டு இருந்தோமா.. நான் அவள  கட்டிப்பிடிச்சி முத்தம் வச்சேனா..
அப்பறம் பாத்தா  அது நாயி..'

"அக்கறந்தான் த்எரிஞ்சத்உ.. அது கனகுனு.. அழுத்தி இடிச்சதுல.. அந்த நாயி குதட்ட கடிச்சிடிச்சிங்க ஆய்"

'அப்பறந்தான் தெரிஞ்சது.. அது கனவுனு.. அழுத்தி பிடிச்சதுல..
அந்த நாயி உதட்ட கடிச்சிடுச்சுங்க பாய்'
டே..டேய். போதுமுடா இதுக்குமேல நானே சொல்லிடுறேன்டா வந்தை..
உலகத்துலேயே முதல் முதலா இப்படி ஒரு மொழிக்கு மொழிப்பெயர்த்தவன் நானா தான் இருக்கனும்.. கொடுமைடா.'னு வி.குமார் தலையில அடிச்சிகிட்டு சொல்ல..

"ஙரிணே.."(சரியாமாம்) மண்டைய ஆட்டுனான் வந்தை..

" பாய்.. பைய்யன் எப்பவுமே முத்தத்துலேயே நினைப்ப வச்சிகிட்டு மாடியில படுத்திருக்கான்.. கனவுல அவனோட ஆளு வந்திருக்கு.. ஏதோ கசமுசா கனவுல.. அதனோட வெளிப்பாடு.. பக்கத்துல படுத்திருந்த நாய் மாட்ட.. பாவம்.. நாய் புடிங்கிருச்சு..
நல்ல வேள பாலமுருகன் கொஞ்சம் தள்ளி படுத்ததுனால தப்பிச்சாப்போல"

"என்பது பாலாவு வந்திருக்காப்லையா.. ஆளு எங்க?"

"ஆமாங்க பாய்.. அவர்தான் காலையில போன் செஞ்சி விசயத்தை சொல்லி ஆன்டனி ஆம்ரோஸ் டாக்டர்ட கூட்டிப் போறேன் வாங்கனு சொல்ல.. நானும் அங்க போயி பார்த்தா  .. டாக்டர் உதட்டுல தையல் போட்டு பிளாஸ்டர் ஒட்டிட்டு இருந்தார்.. அப்பறம், கொஞ்சம் முன்னாடி தான் வந்தோம்.. பாலா நம்ம கடைக்கு மருந்து வாங்க போயிருக்கார்.."

"அடப்பாவமே..  இது தேவையா இவனுக்கு.." என்று சொல்லிகிட்டு இருக்கும்போதே பாலாவும், துரை தேவன் அண்ணனும் " வாங்க பாய்"னு அழைத்தபடி வந்தனர்..

"அடடே.. வாங்க பா.. இப்ப தான் வரீங்களா துரை'

" அப்பவே வந்துட்டேனுங்க பாய்.. போய் டாக்டர  சத்தம் போட்டுட்டு வரேனுங்க"

"ஏன்?"

"பின்ன என்னங்க பாய்.. மொத்தமா வாயில  தையல போட்டு அடைக்கிறத விட்டுட்டு.. பாதிய மூடியும், மூடாமலும் விட்டுட்டார்.. இப்ப என்னடானா நொய்நொய்னு பேசி நம்ம உயிர எடுக்குறான்.. அதான்.. கோபத்துல ரெண்டு காட்டு காட்லாம்னு போனேன்"

"ஊக்கும்.. எல்லாருமே வந்தையால நொந்து தான் போயிருக்காங்க போலயே... ஆனா... இனி கையால எழுதி நம்மல இம்சை செய்வானே" னு சொல்லிகிட்டு இருக்கும் போதே..
கார்த்திக் கூல்டிரிங்ஸோட வர..
பின்னாடியே ஒரு நாயும் வர..

"இந்த நாய் தாங்க பாய்" னு சொல்லி வாய் மூடுறதுக்குள்ள

என்ன நினைச்சிச்சோ தெரியல .. அந்த நாய் விறுவிறுனு வந்தைகிட்ட போயி..
போன வேகத்துல அவன  கடிச்சி வச்சசிடிச்சு...
"ங்ஙே..ங்ஙே..ங்ஙே" னு வந்தை அலற..

பாலமுருகன் போன எடுத்து "அய்யய்யோ... டாக்டர் .. நம்ம வந்தைய திரும்பவும் நாய் கடிச்சிருச்சு'

" அச்சச்சோ... அப்படியா எங்க"

"கையில  டாக்டர்.."

"சரி..சரி.. கூட்டிட்டு வாங்க" போன் கட்டாக..

"அடடே இது என்னடா .. நாய் கடிச்சுருச்சேனு வருத்தப்படுறதா..
இனி கொஞ்ச நாளைக்கி எழுதி இம்சிக்க மாட்டானேனு சந்தோச படுறதா.. அரே அல்லாஹ் என்னடா இது
வந்தைக்கு வந்த சோதனை.." தலையில தட்டிகிட்டு இருக்கும் போதே

துரை, பாலா, கார்த்திக், விஜயகுமார் நால்வரும் வந்தகயை தூக்கிட்டு
"ஆட்டோ..ஆட்டோ.. " னு கத்திகிட்டே ஓடுனாங்க..

விஜயகுமார் வேல்முருகன்

திகில் காடு 6

ஆற்றல் அனைத்தும் உன்னில் உண்டு
பேற்றல் பேச்சை விடுவாய் மனமே
சீற்றம் தன்னை விட்டு மறந்தால்
ஏற்றம் நாளும் தொடரும் மனமே..
சூட்சுமத்தின் நிலையதை உரைத்தேன்
ஆசானாகி என்றும் உனக்கு..

                   திகில் காடு

                            6

    "ஏன் தீர்வு இல்ல.. இருக்குப்பா" என இருவர் தோள்கள் மீதும் கையை வைத்து நின்றிருந்தார் அவர்களின் மேனேஜர்..
"நிச்சயம் தீர்வு இருக்கு..
இன்னைக்கு சீக்கிரம்
வேலை முடிஞ்சி ரெண்டு பேரும் என்னோட வீட்டுக்கு வாங்க..
முக்கியமான விசயங்கள் பேசுறோம்.
இப்ப போய் கூலா வேலைய பாருங்க..
சாய்ங்காலம் பார்க்கலாம்" என்று இருவருடைய தோள்களையும் தட்டிகொடுத்து சென்றார்..

"பாத்தியா சரவணா.. மேனேஜரே சொல்லிட்டார்..கவலைய விடு.. என்னனு போய் பாத்துடுவோம்..
இப்ப வேலைய முடிக்கிறோம்.. சாய்ங்காலம் போய் என்னனு பாக்குறோம்.. ரைட்.. வர்ட்டா" என்று
சரவணன் கைகளை பிடித்து குலுக்கிவிட்டு நகர்ந்தான் சிவா..

"சரிடாப்பா" என்று சொல்லியபடி வேலையில் மூழ்கினான் சரவணன்..

டிங்டாங்..டிங்டாங்..டிங்டாங்.. டிங்டாங்.. டிங்டாங் என  சத்தம்போட்டுவிட்டு மணி 5 என்பதை காட்டியது கடிகாரம்..
அலுவலகத்திலிருந்து அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர்..
மேனேஜர் தன்னுடைய சிறிய கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தபடியே.. "என்ன தம்பிகளா போலாமா..நம்ம கார்லையே போயிடுவோமே"..

" இல்லைங்க சார்.. நாங்க பைக்ல வந்திடுறோம்..சிவாவோட வண்டி மெக்கானிக் செட்ல இருக்கு.. போகும்போது எடுக்கனும் சார்" என்று சரவணன் தன் வண்டி சாவியை கையில எடுத்தபடியே சொன்னான்.

"ஆல்ரைட்..பாத்து வாங்கப்பா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..

சரவணனும், சிவாவும் பைக் அருகே வரும்பொழுது மரத்தின் மேலிருந்து ஒரு காக்கா சரவணன் மீது எச்சமிட்டது..
"ச்சேய்..இது வேறையா .. " என்று சொன்னபடி சிவா.. "சரவணா வா .. கேட் பக்கத்துல இருக்குற குழாயில கழுவிடுவோம்" என்று அவனை கேட் அருகே அழைத்துச் செல்ல..
திடீரென
"சடாஆஆர்" என்றொரு பெருஞ்சத்தம்..
இருவரும் திரும்பி பார்க்க,அங்கிருந்த புன்னை மரத்திலிருந்து ஒரு பெரிய கிளை உடைந்து வண்டியின் அருகே விழுந்தது.. இருவரும் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எச்சம் போட்ட காக்கை 'கர்..கர்..' என கத்தியபடி பறந்தது..

"காக்கா..ஆய் போனதும் நல்லதா போச்சுங்க தம்பி..இல்லைனா உங்க ரெண்டு பேர் மேலேயும்ல விழுந்திருக்கும் " என்றபடி கேட் செக்யூரிட்டி ஓடி வந்தார்..
பிறகு மூவரும் சேர்ந்து அந்த மரக்கிளையை இழுத்து ஓரங்கட்டினர்.. மரக்கிளை நல்ல கனமாக இருந்தது.

"நீங்க செஞ்ச புண்ணியம் தம்பி, உங்க குலசாமி தான் காக்கா வடிவத்துல வந்து காப்பாத்தியிருக்கு.. " என்று
சொல்லியபடியே பாட்டிலில் இருந்த தண்ணீரில், சரவணன் மேலிருந்த எச்சத்தை துடைத்தபடி சொன்னார் செக்யூரிட்டி..

"ரொம்ப.. நன்றிங்க பழனியண்ணே"
என்று, தன் கைக்குட்டையால் ஈரத்தை
துடைத்த படியே தன் வண்டியை எடுத்தான் சரவணன்.. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரும்பவில்லை என்பதை அவன் முகம் காட்டியது..
உடனே சிவா "சாவிய கொடு சரவணா வண்டிய நான் ஓட்டுறேன்" என்றபடி சாவியை வாங்கி வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்..

"காக்கா உக்காந்து பனம் பழம் விழுந்த கதன்னு தான் கேள்விப்பட்டுறுக்கோம்.
இங்க என்னடானா மரமே ஒடைஞ்சி விழுதே..
அந்தம் மரம் அவ்ளோ வீக்கா..
இல்ல..
அவ்ளோ வெய்ட்டா அந்த காக்கா.. ஒன்னும் புரியலையே..ங்ஙே.." என்று சிவா சொன்னதும்..
"ஹா ஹா ஹா ஹா" என்று சிரித்தான் சரவணன்..
"அப்பாடா.. மூட மாத்தியாச்சுடா.. " என்றபடி வண்டியை கொஞ்சம் வேகமாக்கினான்..சிவா..

சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட் நுழைவாயிலில் நுழைந்ததும் அங்கிருந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் இருந்து ஓடி வந்த ஒரு வட இந்திய இளைஞன் அவர்களை நிறுத்தி விசாரிக்கையில், சற்று நடுத்தர வயதுள்ள தமிழர் அவர்களை உள்ளே அனுமதிக்கலாம் தெரிந்தவர்கள் தான் என்று அவனுக்கு சொல்லிவிட்டு, இருவருக்கும் வணக்கம் வைத்து அனுப்பினார்.. சரவணன் பல முறை மேனேஜருடன் வந்துள்ளதால் பழக்கம்..

அப்பார்ட்மென்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் ..மூன்றாவது பிளாக்கின் கீழ் வண்டியை நிறுத்திவிட்டு, லிப்டுக்குள் வந்தார்கள்..
6 ஆம் எண்ணை அழுத்தியதும், லிப்ட் சில வினாடிகளில் 6 ம் தளத்தில் நின்று, இருவரும் வெளியேறி,
வலப்பக்கத்திலிருந்த, "சிவசங்கரன்" என்ற பெயர் பலகைக்கு அருகிலிருந்த அழைப்பு மணி பொத்தானை அழுத்தியதும் சோலைக்குள் குருவிகள் பாடும் இன்னிசை கேட்டு அடங்கியதும்.. 'டொடக்' என்று கதவு திறந்ததும் "வாங்க.. வாங்க.. தம்பிகளா.. என்ன இவ்வளவு நேரம்.. பைக்க தள்ளிகிட்டே வந்தீகளா..ஹிஹிஹி.."என்று சிரித்தப்படியே வரவேற்றார் மேனேஜர்..
வெள்ளை வேட்டி, வெள்ளை டி-சர்ட்டில் இருந்தார் அவர்..
" இல்லைங்க சார்.. உங்க பின்னாடியே தான் கிளம்பினோம்" என்று மரம் விழுந்த விவரத்தை ஒரே நிமிடத்தில் சொல்லி முடித்தான் சிவா..

"அடடே..ம்ம்ம்..அப்படியா.."
என்று வியப்பானார் மேனேஜர்..

உடனே சரவணன்.."எங்க.. சார் பிள்ளைங்க.. மேடம்.. யாரையும் காணோம்.."என்றதும்..

"ஓ..அதுவா.. காஞ்சிபுரத்துல இருக்குற நம்ம மாமனார் வீட்டுல ஒரு விசேசம்.. அதுக்கு காலையிலேயே புறப்பட்டு போயிட்டாங்க.. நான் இனிமே தான் கிளம்பனும்.. சரி.. என்ன சாப்புடுறீங்க.. ஜூஸ் ஆர் காபி, டீ " என்றதும்..

சிவா "ஜூஸ் சாப்பிடலாம் சார்" என்றதும்..
'ம்..சாப்பிடுவோமே..' என்று சொல்லிவிட்டு ஃபிரிட்ஜை திறந்து ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பழரசத்தை மூன்று கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மூன்று பேரும் எடுத்து பருக ஆரம்பித்தனர்..

சிவா, சரவணனின் முகத்தை பார்த்து தலையசைக்க, அவனும் கேட்போம் என்பதை போல தலையாட்ட..
அதை கவனித்த மேனேஜர்..
"புரியுது சிவா.. என்ன தீர்வுனு தானே.. சொல்றேன்.. ஜூசை குடிங்க இதோ வறேன்" என்று சொல்லிவிட்டு ..
அங்கிருந்த அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஏதோ ஒன்றை தேடினார்.. அலமாரியில் நிறைய புத்தகங்கள்.. சில நிமிட தேடலுக்கு பின்பு முகம் மலர்நதது.ஒரு புத்தகத்தை எடுத்து வந்து சரவணனின் கைகளில் கொடுக்க..
அதன் அட்டைப்படங்கள் பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக இருந்தது.. தலைப்பு இல்லை..
ஒரு பக்கத்தை திருப்பியதும்....
"கனவு என்னும் மாய உலகம்
நடந்ததும்_ நடக்க இருப்பதும்" என்ற தலைப்பு..

"இப்ப நான் சொல்ல போறது ரொம்ப முக்கியமான விசயம்" என்று ஜூசை குடிக்க ஆரம்பித்தார் மேனேஜர்....

தொடரும்..

விஜயகுமார் வேல்முருகன்

முந்தைய அத்தியாயம்